கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸார் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஐஎன்எஸ்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ புதன்கிழமை கைது செய்தது. இதைக் கண்டித்து வாணியம்பாடி பேருந்து நிலையம் எதிரே வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் பிரபு தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
இதில், மாவட்டப் பொருளாளர் மகேஷ், மாநில, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சரவணன், சுரேந்தர், ராமசாமி, பிரதாப், சோலூர்மாணிக்கம், மணி, ஸ்டாலின், வெங்கடேஷ், வெள்ளகுட்டை பழனி, வாணியம்பாடி நகர நிர்வாகிகள் ஜிலானி, தபரேஷ், காலித் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.