திருப்பத்தூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
சுகாதாரமற்ற ஆட்டிறைச்சி கூடம் என்ற தலைப்பில் தினமணியில் புகைப்படத்துடன் விரிவான செய்தி புதன்கிழமை வெளியானது. இதையடுத்து சுகாதாரத் துறை அலுவலர் ராஜரத்தினம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆட்டிறைச்சிக் கூடத்துக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அங்கிருந்த கழிவுகளை அகற்ற உத்தரவிட்டனர். மேலும், வியாபாரிகளிடம் காலாவதியான இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது என்று எச்சரித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒரு வாரகாலத்துக்குள் சுகாதாரமற்ற முறையில் உள்ள கழிவுகளை முழுவதுமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இங்குள்ள ஒரு அறையில் மக்கும் குப்பைகளில் இருந்தும், சாணத்திலிருந்தும் உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும். விரைவில் கால்நடை மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் ஆடு அறுப்பது தெரியவந்தால் கடையை பூட்டி "சீல்' வைக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக தேர்தல்: என்னென்ன விதிகள் அமலில் இருக்கும்?
தனுஷ் தயாரிக்கும் புதிய படம்!

ஸ்கூட்டருக்கு இணையாக... அமேசானில் கிடைக்கும் புதிய மின்சார சைக்கிள்!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

