குடியாத்தம் அருகே வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து 72 பாம்புக் குட்டிகள் வியாழக்கிழமை பிடிபட்டன.
குடியாத்தத்தை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் தொழிலாளி ஜானகிராமன். கடந்த சில நாள்களாக இவரது வீட்டருகே சாரைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்ததாம். இதுகுறித்து ஜானகிராமன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் தலைமையில் வீரர்கள் வியாழக்கிழமை ஜானகிராமன் வீட்டுத் தோட்டத்தில் சோதனையிட்டனர். அப்போது, புதர் மறைவில் ஏராளமான பாம்புக் குட்டிகள் ஊர்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். இதையடுத்து அங்கிருந்த 72 பாம்புக் குட்டிகளைப் பிடித்தனர். பின்னர், வனத் துறையினருக்கு தகவல் தெவிரித்தனர்.
வனக்காப்பாளர் வெங்கடேசன் தலைமையில் வந்த வனத் துறையினர், பிடிபட்ட பாம்புக் குட்டிகளை கல்லப்பாடி காப்புக் காட்டில் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

