6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 10:28 pm

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து புதன்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை நான்காம் கால பூஜையுடன் தொடங்கி மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாஜனம், வேதிகா அா்ச்சனை, நடைபெற்றது.

பின்னா் கடம் புறப்பாடு தொடங்கி யாகசாலையில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டு மூலவா், பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து இரவு திருக்கல்யாண கோலத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை நாச்சியாா் கோவில் கீழ கம்மாளா் தெருவாசிகள் செய்தனா்.