உணவுப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேலூர் கோட்டை, ஏலகிரியில் திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம்கள் தொடங்கப்பட்டன.
தமிழக உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள 53 சுற்றுலாத் தலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி, வேலூர் மாவட்டத்தில், வேலூர் கோட்டை, ஏலகிரி ஆகிய இரு இடங்களில் இந்த விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இம்முகாம்களில், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளிகளில் கலப்படம் செய்திட பயன்படுத்தப்படும் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மிளகில்
பப்பாளி விதைகள், அரிசியில் கல், சலவைக் கற்கள், மண் உருண்டைகள், உளுந்தில் தவிடு, தேயிலைத் தூளில் புளியங்கொட்டைத் தூள், தேனில் வெல்லப்பாகு, நெய்யில் வனஸ்பதி, மிருகக் கொழுப்பு, துவரையில் கேசரி பருப்பு, மஞ்சளில் ஈய அசிடேட், கடுகுகளில் அர்ஜிமோன் விதைகள் என உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கார்பைடு கற்கள், வெயில் காலத்தில் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருள்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருள்கள் ஆகியவை குறித்தும், உணவுப் பொருள்களை பரிசோதனை செய்து வாங்குவது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு துண்டறிக்கைகள் மூலமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.
மே 31-ஆம் தேதி வரை தினமும் காலை 9 முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் இந்த முகாம் நடத்தப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெ.வெங்கடேசன் தெரிவித்தார்.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில், வேலூரிலுள்ள வணிகர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

