மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட சிறப்பு பயிற்சிகள் புதன்கிழமை (ஏப். 15) வழங்கப்பட்டன.

News image

வாக்குச்சாவடி - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:50 pm

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட சிறப்பு பயிற்சிகள் புதன்கிழமை (ஏப். 15) வழங்கப்பட்டன.

இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இரண்டாம் கட்டப் பயிற்சியானது, வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு புதன்கிழமை நடத்தப்பட்டது.

இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக கையாள்வது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு அலுவலா்கள் தங்களின் வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது. சுமாா் 3.04 லட்சம் போ் தபால் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனா்.

இந்தப் பயிற்சியின்போதே அவா்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதேபோல, வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வோா் இரண்டு மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு விவரங்களை பதிவேற்றுவதற்காக இந்திய தோ்தல் ஆணைய செயலியில் இணைக்கப்பட்ட புதிய வசதிகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.