தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில்  ஏ.கஸ்பா- கங்காபுரம் சாலை விரிவாக்கம்

ஆம்பூர் ஏ.கஸ்பா-கங்காபுரம் சாலை இருவழிச் சாலையாக ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆம்பூர் ஏ.கஸ்பா-கங்காபுரம் சாலை இருவழிச் சாலையாக ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
ஆம்பூர் ஏ-கஸ்பாவில் இருந்து கங்காபுரம் வரையிலான சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. அந்தச் சாலை சுகர்மில் சாலை என்றழைக்கப்பட்டது.  ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கரும்பு எடுத்து செல்வதற்காக அந்தச் சாலை போடப்பட்டதால் அவ்வாறு அழைக்கப்பட்டது. 
மாநில நெடுஞ்சாலையின் தடம் சி13 என்ற அந்தச் சாலை தற்போது 1,800 மீட்டர் தூரத்துக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்காக சாலையோரம் முள்செடிகள் வெட்டி தூய்மைபடுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. 
சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் அங்குள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற 
உள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.