‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

விவசாயிகள் தொழில் தொடங்க வழங்கிய இயந்திரங்கள்: ஆட்சியர் ஆய்வு

குறு, சிறு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

குறு, சிறு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழுவில் குறு, சிறு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் தொடங்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். 
இதையடுத்து தமிழ்நாடு மானாவாரி தொகுப்பு திட்டம் பகுதி 1-இன் மூலம் குறு, சிறு விவசாயிகள் தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாட்டு மரசெக்கு இயந்திம், பருப்பு உடைக்கும் இயந்திரம், குறு தானியங்கள் தோல் நீக்கும் இயந்திரம், மணிலா உடைக்கும் கருவி மற்றும் ஆயில் பேங்கிங் இயந்திரங்களை வேளாண்மை துறை மூலம் மானியத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவுக்கு  வழங்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், பச்சூர் சென்றாயன் சாமி கோயிலின் பின்புறம் அமைந்துள்ள பருப்பு உடைக்கும் இயந்திர ஆலையை ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது, நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் இப்பகுதியில் விளையும் துவரை, கடலை மற்றும் தானிய வகைபொருள்களை தயாரித்து  மதிப்பு கூட்டு விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், வட்டாட்சியர் குமார், செயற்பொறியாளர் ஸ்ரீதர், வேளாண்மை உதவி இயக்குநர் சுருளிராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.