பேர்ணாம்பட்டு அருகே வளர்ப்பு நாய்களைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பேர்ணாம்பட்டு வனச்சரகர் சங்கரய்யா, வனவர்கள் ஹரி, வேல்முருகன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் பல்லலகுப்பம் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் தாங்கள் வளர்த்து வந்த 4 நாய்களைப் பயன்படுத்தி வனப்பகுதியில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை பங்கு போட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது.
அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், ஏரிகுத்தியைச் சேர்ந்த மணி (55), வெங்கடேசன் (35), கஜேந்திரன் (50), தேவராஜ் (55), முனியப்பன் (52) என்பது தெரிந்தது. அவர்களிடமிருந்து 17 கிலோ மான் இறைச்சி கைப்பற்றப்பட்டது. அதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1 லட்சம் வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைக்கதிர்

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


