நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதாநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன் தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா?எம்.எல்.ஏ. காமராஜ் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!
/

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும், பொதுத் தேர்வு காலகட்டத்தில் மாணவ, மாணவியருக்கு

Updated On :25 பிப்ரவரி 2019, 7:10 am IST

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும், பொதுத் தேர்வு காலகட்டத்தில் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் தேர்வு பயம் நீங்கவும், ஞாபக மறதியைப் போக்கவும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
பீடத்தின் ஸ்தாபகர் முரளிதர சுவாமிகளின் ஆலோசனைப்படி ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நட்சத்திரம், பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10 மணி முதல் 12 மணி வரை நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானை வேண்டி சிறப்பு தன்வந்திரி ஹோமமும், சரஸ்வதி ஹோமமும் நடத்தப்பட்டன. மேலும் வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரைப் பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றன. 
இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு முரளிதர சுவாமிகள் ஆசியுடன் குங்குமம், அபிஷேகத் தேன், நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள், ஏலக்காய் போன்ற விசேஷ பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.