குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும், பொதுத் தேர்வு காலகட்டத்தில் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் தேர்வு பயம் நீங்கவும், ஞாபக மறதியைப் போக்கவும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
பீடத்தின் ஸ்தாபகர் முரளிதர சுவாமிகளின் ஆலோசனைப்படி ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நட்சத்திரம், பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10 மணி முதல் 12 மணி வரை நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானை வேண்டி சிறப்பு தன்வந்திரி ஹோமமும், சரஸ்வதி ஹோமமும் நடத்தப்பட்டன. மேலும் வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரைப் பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு முரளிதர சுவாமிகள் ஆசியுடன் குங்குமம், அபிஷேகத் தேன், நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள், ஏலக்காய் போன்ற விசேஷ பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







