தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் ரத்து: வேலூரில் இளைஞர்கள் சாலை மறியல்

கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையாகத்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:15 am IST

கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி வேலூரில் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், நிர்வாகக் காரணங்களால் இந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு சரிவர தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேர்காணலில் பங்கேற்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சனிக்கிழமை வந்திருந்த இளைஞர்கள், நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருப்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு அதிகளவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 400-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நேர்காணல் நடைபெற இருந்த நேதாஜி விளையாட்டு மைதானத்துக்கு முன்பு திரண்டனர்.
அப்போது, அங்குள்ள அறிவிப்பு பலகையில் நேர்காணல் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, நேர்காணல் ரத்து செய்யப்பட்டது குறித்து நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து, இளைஞர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.