ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ஆற்காட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

Updated On :23 ஜனவரி 2019, 11:33 pm IST

ஆற்காட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
ஆற்காடு நகராட்சியில் 3 இடங்களில் கிடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாவது இடமாக  ஆற்காடு பூபதி நகர் பகுதியில் புதிதாகக் கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை செய்வதற்காக நகராட்சி ஆணையர் ஷகிலா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு புதன்கிழமை நேரில் சென்றனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். "இங்கு குப்பை தரம் பிரிக்கும் கிடங்கை அமைக்கக் கூடாது. 
அவ்வாறு அமைத்தால் ஈக்கள், கொசுக்கள் அதிகரித்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு இப்பகுதிவாசிகள் பாதிக்கப்படுவார்கள்' என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கிடங்கு கட்டுமானப் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.