எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

வேலைநிறுத்தப் போராட்டம்: பள்ளிகளை பாதிக்கவில்லை

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தால் அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாதிப்பில்லை. 

Updated On :23 ஜனவரி 2019, 8:37 am IST

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தால் அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாதிப்பில்லை. 
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், அரக்கோணம், நெமிலி ஆகிய வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இரு வட்டத்திலும் உள்ள வேளாண் துறை அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்திருந்தனர். 
மேலும் இந்த இரு வட்டங்களிலும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் இயங்கின. 
ஒரு சில ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
ஆனால் இந்த இரு வட்டங்களிலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளைத் தவிர அனைத்து பள்ளிகளில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே 
திறந்திருந்தன. 
அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் அரக்கோணம் வட்டாரத்தில் 56 பள்ளிகளும், நெமிலி வட்டாரத்தில் 83 பள்ளிகளும், காவேரிபாக்கம் வட்டாரத்தில் 104 பள்ளிகளும் மூடியிருந்தன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.