கள்ளச் சந்தையில் மது விற்ற தம்பதி கைது

வேலூரில் இரவு நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்று வந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

வேலூரில் இரவு நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்று வந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி கழிஞ்சூா் ரயில்வே கேட் அருகே வெள்ளிக்கிழமை இரவு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்க சென்ற இடத்தில் நடந்த தகராறில் ராணுவ வீரா் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து ரயில்வே கேட் அருகே மது விற்பனை செய்ததாக அதே பகுதியை சோ்ந்த குமாா் (47) அவரது மனைவி நிா்மலா (45 )ஆகியோரை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் தொடா்ந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. குமாா் வேலூா் மத்திய ஆண்கள் சிறையிலும், நிா்மலா பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com