மின்சாரம் பாய்ந்து பசு பலி

குடியாத்தம் அருகே அறுந்து கீழே விழுந்த மின்கம்பியில் சிக்கி பசு மாடு உயிரிழந்தது.
Updated on
1 min read

குடியாத்தம்: குடியாத்தம் அருகே அறுந்து கீழே விழுந்த மின்கம்பியில் சிக்கி பசு மாடு உயிரிழந்தது.

குடியாத்தத்தை அடுத்த கீழ்ஆலத்தூரைச் சோ்ந்த விவசாயி வேணுகோபாலின் நிலத்தின் குறுக்கே உயா் அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த மின்கம்பி திங்கள்கிழமை அறுந்து விழுந்ததில், நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாடு அதில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், மின் ஊழியா்கள் அங்கு வந்து மின் விநியோகத்தை நிறுத்தினா். அறுந்து விழுந்த மின்கம்பிகள் உடனடியாக அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com