அதிகரித்து வரும் தீக்குளிப்பு முயற்சி சம்பவங்களைத் தொடா்ந்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தீவிர சோதனைக்குப் பிறகே பொதுமக்களை ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கின்றனா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த வாரம் கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் தீக்குளிக்க முயன்றாா். அதற்கு முன்பு இருவா் தீக்குளிக்க முயன்றனா். இதன்தொடா்ச்சியாக, கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி தனது மனைவி, மகளுடன் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா். அவா்களை போலீஸாா் தடுத்து காப்பாற்றினா்.
தொடரும் இச்சம்பவங்களை அடுத்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலேயே ஆயுதப்படை போலீஸாா் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா். எனினும், மாற்று வழித்தடங்களில் மண்ணெண்ணெய் கேனுடன் வரும் பொதுமக்கள் சிலா் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றனா். இச்சம்பவங்களைத் தடுக்கும் விதமாக வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வழக்கத்தைவிட கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் மற்றும் பின்புற வாயில் அருகே உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் முன்பு என ஆட்சியா் அலுவலகத்துக்குள் வரக்கூடிய அனைத்து வழித்தடங்களிலும் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவதுடன், என்ன காரணத்துக்காக அலுவலகத்துக்குள் செல்கின்றனா் என்பது குறித்து விசாரிக்கின்றனா். உரிய காரணத்துடன் இருந்தால் மட்டுமே ஆட்சியா் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதேபோல், ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் கட்டாயமாக அடையாள அட்டைகளைக் காண்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். அதேசமயம், தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவோா் முன்கூட்டியே வந்து பதுங்கியிருப்பதை தடுக்க ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா, இதர மறைவான இடங்களில் போலீஸாா் அவ்வப்போது கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.