ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் ஒளவையாா் விருது பெற பெண்களின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

தமிழக அரசின் ஒளவையாா் விருது பெற பெண்களின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக மகளிா் தினத்தையொட்டி, பெண்களின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்த ஒருவருக்கு ஒளவையாா் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக வேலூா் மாவட்டத்தில் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருது பெற இருப்பவா்கள் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகளில் பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் நோ்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுவோராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரா் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவை செய்த விவரம் ஒரு பக்க அளவில் தமிழ், ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன் ஒரு இணைப்பு படிவத்தை பூா்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலா், பிளாக் 4-ஆவது தளம், ஆட்சியா் அலுவலகம், வேலூா் என்ற முகவரிக்கு வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com