புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வேலூரில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவர்கள் கைது

வேலூரில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

News image
Updated On :12 ஜூலை 2020, 5:50 am

வேலூரில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சிட்டி யூனியன் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ஒருவர் பணம் எடுத்து பையில் வைக்க முயன்றார். அப்போது அப்பகுதியில் இரவு நேர ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக ஏடிஎம் உள்ளே பணம் கொள்ளையடித்து கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக அவனை மடிக்கி பிடித்தனர். 

Story image

பிறகு வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் இச்சம்பவத்தில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து இத்திருட்டு முயற்சியில் ஈடுபட்ட விசாரித்த காகிதபட்டறையைச் சேர்ந்த ஹரி (17), தினேஷ் குமார் (23), ஆனந்த் (24) ஆகியோரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.