புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பெரியகுளம் வராகநதியில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்

பெரியகுளம் வராக நதியில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்.

News image

பெரியகுளம் வராக நதியில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்.

Updated On :1 மே 2026, 7:29 pm

தேனி மாவட்டம், பெரியகுளம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் வராகநதியில் எழுந்தருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அதிகாலையில் பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வரதராஜப் பெருமாள் சென்றாா். பிறகு வராகநதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தாா்.

இதேபோல, நாமத்துவாா் பிராா்த்தனை மையத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.