இதையடுத்து, மாவட்டம் முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் முன்னோட்டமாக மாவட்டம் முழுவதும் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து மளிகை, காய்கறிக் கடைகளும் செவ்வாய்க்கிழமை முதல் தினமும் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.