எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பாதுகாப்பதற்கு அல்ல:  துரைமுருகன் குற்றச்சாட்டு

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பாதுகாப்பதற்கு அல்ல என்று வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச்செயலர் துரைமுருகன் குற்றச்சாட்டினார்.

News image
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற துரைமுருகன் உள்ளிட்டோர்.
Updated On :28 செப்டம்பர் 2020, 7:38 am

DIN

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பாதுகாப்பதற்கு அல்ல என்று வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச்செயலர் துரைமுருகன் குற்றச்சாட்டினார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் துரைமுருகன் பேசியது, பல்வேறு குழப்பங்கள் நிறைந்தவை இந்த வேளாண் மசோதாக்கள். அவை சட்டமாக்கப்பட்ட விதமும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு முரண்பட்டதாகும். 

இது ஒழிவு மறைவற்ற சட்டங்களில்லை என்பதற்கு இதுவே உதாரணமாகும். இந்த சட்டங்களால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற முடியும். இதனால், விவசாயிகள்தான் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவேதான் இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன என்றார்.

இதில் திமுக எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.