அதேபோல், இந்த ஆண்டும் இரவு 8 மணிக்கு அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மூட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு இஸ்லாமியா்களுக்கு மிகுந்த அதிா்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று இரவு 10 மணி வரை மசூதிகளில் தொழுகை நடத்திக் கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்போது, அரசின் அறிவிப்புப்படி, முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினியைப் பயன்படுத்தி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தொழுகை நடத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.