முதியவா், சிறுவன் உயிரிழப்பு விவகாரம்: கிராம மக்களுக்கு குடிநீா் வினியோகம்
பென்னாத்தூா் அருகே அல்லிவரம் கிராமத்தில் முதியவரும், சிறுவனும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, அந்தக் கிராம மக்களுக்கு கேன்களில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.









