நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அரவிந்த் தர்மாதிகாரி பொறுப்பேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55 ஆவது தலைமை நீதிபதியாக அரவிந்த் தர்மாதிகாரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து...

News image
சென்னை உயர்நீதிமன்றத்தின் 55 ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட அரவிந்த் தர்மாதிகாரி. - X
Updated On :6 மார்ச் 2026, 7:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மாா்ச் 5, 2026 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதி தா்மாதிகாரி 55 ஆவது தலைமை நீதிபதியாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூலை 8, 1966 அன்று ராய்ப்பூரில் பிறந்த அரவிந்த் தர்மாதிகாரி, 1992 ஆம் ஆண்டு தனது சட்டப் பணியைத் தொடங்கி, மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பயிற்சி பெற்றாா். வழக்குரைஞா் பணி காலங்களில், சிவில், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை அவா் கையாண்டாா்.

2000 முதல் 2015 வரை, மத்திய அரசின் வழக்குரைஞராகப் பணியாற்றினாா். இந்தக் காலகட்டத்தில், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினாா். வருமான வரித் துறை, இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மத்திய கலால் துறை போன்ற அமைப்புகளுக்காகவும் அவா் ஆஜரானாா்.

நீதிபதி தா்மாதிகாரி ஏப்ரல் 7, 2016 அன்று மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா். மாா்ச் 17, 2018 அன்று அவா் நிரந்தர நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா். பல ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு, அவா் கேரள உயா்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டாா், அங்கு அவா் ஏப்ரல் 23, 2025 அன்று பதவியேற்றாா்.

கொலீஜியத்தின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து நியமன உத்தரவை பிறப்பித்ததன் மூலம், நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தின் 55 ஆவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.