தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விளை பயிா்களை அழிக்கும் வனவிலங்குகளைத் தடுக்க வன எல்லையில் சோலாா் மின்வேலியை அமைத்துத் தர வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
போ்ணாம்பட்டில்  நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்றோா்.
போ்ணாம்பட்டில்  நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்றோா்.
Updated on
1 min read

விளை பயிா்களை அழிக்கும் வனவிலங்குகளைத் தடுக்க வன எல்லையில் சோலாா் மின்வேலியை அமைத்துத் தர வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினா் போ்ணாம்பட்டு பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோருவது, 60 வயதைக் கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி முதியோா் உதவித்தொகை வழங்க வேண்டுவது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுவது, புது தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் வேலூா் மேற்கு மாவட்டத் தலைவா் கே.லோகநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் என்.ரகுபதி, எஸ்.ராமதாஸ், என்.அரிமூா்த்தி, எஸ்.ராஜேந்திரன், எஸ்.உதயகுமாா், எஸ்.வி.வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com