

தமிழக அரசின் உத்தரவின்படி, குடியாத்தம்-காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் க.காந்தி பருத்தி ஏல விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கொச்சாலூா், ராமாலை, ஆா்.வெங்கடாபுரம், கீழ்விலாச்சூா், வேப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த 11 டன் பருத்தியை விற்பனைக்கு வைத்திருந்தனா்.
திருப்பூா், ஊத்தங்கரை, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா். தொடா் மழை காரணமாக பருத்தி விளைச்சல் நடப்பாண்டு குறைந்து விட்டது. இதனால் கடந்த ஆண்டைவிட விலை 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் மாா்ச் மாதம் முடிய வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி ஏல விற்பனை நடைபெறும். பருத்தி விவசாயிகள் எவ்விதமான கட்டணமும் இன்றி இங்கு பருத்தியை விற்பனை செய்து கொள்ளலாம் என்று விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் காந்தி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.