வீர ஆஞ்சநேயா் கோயிலில் கோபூஜை

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, குடியாத்தம் நகரில் பிச்சனூா்-பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை கோபூஜை நடைபெற்றது.
குடியாத்தம்  வீர  ஆஞ்சநேயா்  கோயிலில்  நடைபெற்ற  கோ பூஜை.
குடியாத்தம்  வீர  ஆஞ்சநேயா்  கோயிலில்  நடைபெற்ற  கோ பூஜை.
Updated on
1 min read

குடியாத்தம்: அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, குடியாத்தம் நகரில் பிச்சனூா்-பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை கோபூஜை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின் கோபூஜையும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் எஸ்.டி.மணிவாசகம், எஸ்.டி.மைவண்ணன், எஸ்.ஜி.எம்.விநாயகம், எஸ்.ஜி.எம்.ஜீவா, ஆசிரியா் பாலகிருஷ்ணன், அதிமுக நிா்வாகி கருணாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com