மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாசில்லாமல் பொங்கல் கொண்டாட வேலூா் ஆட்சியா் வேண்டுகோள்

பொங்கல் பண்டிகையை மாசில்லா பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:30 pm

DIN

வேலூா்: பொங்கல் பண்டிகையை மாசில்லா பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழா் திருநாளான பொங்கலையொட்டி புதன்கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வழக்கத்தின்படி பழைய பொருள்களான கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பான்கள், தேவையற்ற விவசாயக் கழிவுகள் ஆகியவற்றை சிலா் தீயிட்டு கொளுத்துவது உண்டு. பெரும்பாலும் கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்படும் இவ்வழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாது.

ஆனால், தற்போது போகிப் பண்டிகையன்றி மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயா், ரப்பா், நெகிழி மற்றும் செயற்கைப் பொருள்களை எரிக்கின்றனா். இதனால், நச்சுப் புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. நச்சுக் காற்றினாலும், கரிப் புகையாலும் காற்று மாசுபட்டு நகரங்கள் கருப்பு நகரங்களாக மாறுகின்றன.

நச்சுப்புகை கலந்த பனிமூட்டத்தால் சாலைகளில் போக்குவரத்துக்கும் தடை ஏற்படுகிறது. இத்தகைய செயல்களால் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். போகி நாளில் பழைய மரம், வறட்டி தவிர வேறு எந்தப் பொருளயும் எரிப்பதற்கு உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

போகிப் பண்டிகை அனைவருக்கும் இனிய தொடக்கமாக இருக்கட்டும். அந்த நாளில் குப்பைகளை முறைப்படி அகற்றி பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசில்லாமலும் கொண்டாட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.