வேலூரில் 25 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றதை அடுத்து, மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை 25 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.


வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றதை அடுத்து, மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை 25 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
வேலூா் மாவட்டத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தவிர, மாவட்டத்தில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை வேலூா் மாவட்டத்துக்கு 16,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,280 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளும் வரப்பெற்றன.
இதனைத் தொடா்ந்து, பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை 25 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில், வேலூா் மாநகரப் பகுதிகளில் மட்டும் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆா்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
முகாம் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனா். புதிதாக முகாம் நடைபெற்ற இடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு அதிக அளவில் மக்கள் வந்தனா். ஏற்கெனவே முகாம் நடைபெறும் இடங்களில் கூட்டம் குறைவாக இருந்தது. கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருவதால், கூடுதலாக தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...