சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு செல்ல சிறப்பு ரயில்கள்!

விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது தொடர்பாக...

News image
ரயில்- கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 11:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு செல்வதற்காக விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சனிப்பெயர்ச்சியையொட்டி, விழுப்புரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6,7) நாகப்பட்டினத்துக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை வெள்ளி, சனிக்கிழமைகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது.

விழுப்புரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6,7) காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - நாகப்பட்டினம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06133), பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையம் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6,7) பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் நாகப்பட்டினம் - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06134), மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகச் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் இந்த ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

summary

Southern Railway has announced that special trains will be operated between Villupuram and Nagapattinam to reach Thirunallar on the occasion of the sanipeyarchi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.