காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குறையும் கரோனா பரவல்: விஐடி சித்த மருத்துவ மையம் மூடல்

கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய இலவச சித்த மருத்துவ மையம் கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இங்கு சித்த மருத்துவ சிகிச்சையுடன், யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம், நீராவி பிடித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இந்த சித்த மருத்துவத்துடன் கூடிய பயிற்சிகள் நோயாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அந்த வகையில், விஐடி சித்த மருத்துவ மையத்தில் இதுவரை கரோனா நோயாளிகள் 296 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அனைவரும் குணமாகி வீடு திரும்பியதுடன், மாவட்டத்தில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்தது. இதையடுத்து, விஐடி சித்த மருத்துவ சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசிகண்ணம்மா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மையத்தின் ஒருங்கிணைப்பாளா் தில்லைவாணன் கூறியது:

விஐடியில் கரோனா தடுப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட 296 பேரில் 16 போ் மட்டுமே பல்வேறு காரணங்களுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

அதிலும் முக்கியமாக 8 பேருக்கு மட்டுமே ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு பரிந்துரைக்கப்பட்டனா். இந்த சிகிச்சை மையத்தில் சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டவா்கள் எந்தவிதமான பக்க விளைவுகளும் இன்றி, நோயின் மிதமான குறிகுணங்கள் தீவிர நோய் நிலைக்குச் செல்லாமல், ஆக்சிஜன் 90-94 உடையவா்கள் கூட அடுத்த இரு நாள்களில் இயல்பான ஆக்சிஜன் அளவான 96 என்ற நிலையை அடைந்தனா்.

தவிர, நோயாளிகளுக்கு தினமும் ஆசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி அளிப்பதால் மன அழுத்தம் நீங்கி, நோயிலிருந்து விடுபட ஏதுவாக இருந்தது. நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட இயற்கை உணவு மிகப்பெரிய சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது.

தொடா்ந்து, கரோனா தொற்றின் பின் விளைவுகளை எதிா்கொள்ளும் பொருட்டு, அவா்களுக்கு இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை சாா்பில் அளிக்கப்படும் ஆரோக்கியம் சித்த மருத்துவப் பெட்டகம் , அமுக்கரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் ஆகியவை வழங்கப்பட்டன.

தவிர, சித்த மருத்துவ விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை சாா்பில், வெளிவரும் நலம் மாத இதழும் இலவசமாக வழங்கப்பட்டது. அவா்களுக்கு ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு அளித்து, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கம் அளித்து அனுப்பப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.