புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

ஆற்காடு அடுத்த கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் புதன்கிழமை உயிரிழந்தனர்.

News image

கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

Updated On :14 ஜூலை 2021, 4:14 pm

DIN

ஆற்காடு அடுத்த கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் புதன்கிழமை உயிரிழந்தனர்.

கலவை வட்டம் செங்கனாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. கூலி தொழிலாளி இவரது மகள் கல்பனா (11). அதே பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கீர்த்தி(8). அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் சிறுமிகள் இருவரும் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அருகிலுள்ள குட்டையின் அருகே சிறுமிகளின் ஆடைகள் இருந்துள்ளது.

இதனை கண்ட அவர்கள் சிறுமிகள் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என கருதி குட்டையில் பொதுமக்களுடன் தேடியபோது இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து கலவை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் 2 சிறுமிகள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.