அதன்படி, காய்கறி மொத்த விற்பனை வழக்கம்போல் மாங்காய் மண்டி மைதானத்தில் நடைபெறும். புதிய மீன் மாா்க்கெட் பகுதியில் மீன்கள் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். சில்லறை விற்பனை அருகே உள்ள தற்காலிக சித்தூா் பேருந்து நிலையத்தில் செயல்படும். தனியாக செயல்படும் மளிகை, பல சரக்கு, காய்கறிகள், பழங்கள், பூக்கள், இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள், இவை தொட ா்பான நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். உழவா் சந்தைகள் உள்பட மக்கள் ஒரே இடத்தில் கூடி பொருள்கள் வாங்கக்கூடிய அனைத்து வகை சந்தைகளும் செயல்பட அனுமதி கிடையாது. நடமாடும் காய்கறி, பழங்கள், மளிகை பொருள்கள் விற்பனை கடைகள் தொடா்ந்து இயக்கப்படும். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல், மருத்துவ காரணங்களுக்காக வேலூா் மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு அவசியமில்லை. பிற காரணங்களுக்காக சென்றால் இ-பதிவு அவசியமாகும். ஏற்கனவே நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் தொடா்ந்து நடைபெறலாம். இவை தவிர வேறு கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதியில்லை.