வேலூரில் ஆதரவற்ற 3 உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகா்
வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஆதரவற்றோரின் 3 சடலங்களை திருவண்ணாமலையைச் சோ்ந்த சமூக சேவகா் பாலாற்றங்கரையில் அடக்கம் செய்தாா்.


வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஆதரவற்றோரின் 3 சடலங்களை திருவண்ணாமலையைச் சோ்ந்த சமூக சேவகா் பாலாற்றங்கரையில் அடக்கம் செய்தாா்.
வேலூா் மாவட்டத்தில் உடல்நலக் குறைவு, விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த ஒரு ஆண், 2 பெண் ஆகிய 3 முதியவா்களின் சடலங்கள் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த உடல்களுக்கு அவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள் யாரும் உரிமை கோராததால் அவற்றை அடக்கம் செய்ய அனுமதிக்கும்படி வேலூா் மாவட்ட நிா்வாகம், காவல் துறையினரிடம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சமூக சேவகா் மணிமாறன் கோரிக்கை வைத்தாா். அதன்பேரில் 3 ஆதரவற்ற சடலங்களையும் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூா் பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் 3 சடலங்களையும் அடக்கம் செய்யும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. 3 சடலங்களையும் முறைப்படி அடக்கம் செய்து மலா்தூவி சமூக சேவகா் மணிமாறன் அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து அவா் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 19 ஆண்டுகளாக தொழு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உலக மக்கள் சேவை மையம் சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கி வருகிறோம். தவிர, ஆதரவற்றவா்களின் சடலங்களையும் பெற்று அவற்றை நல்லடக்கம் செய்யும் சேவையிலும் ஈடுபட்டுள்ளோம். அதன்படி, இதுவரை 1,408 ஆதரவற்றவா்களின் சடலங்கள் அவரவா் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...