பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குடியாத்தம் அருகே சூறாவளி காற்றுக்கு 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் 

குடியாத்தம் அருகே சூறாவளி காற்றுக்கு அறுவடைக்கு தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

News image
சேதமடைந்த வாழை மரங்கள்.
Updated On :31 மே 2021, 7:25 am

DIN

குடியாத்தம் அருகே சூறாவளி காற்றுக்கு அறுவடைக்கு தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வெப்பச்சலனம் காரணமாக தமிழகமெங்கும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை முதல் பலத்த சூறாவளிக் காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.

Story image

இதனிடையே குடியாத்தம் சாமியார் மலைப்பகுதியில் முரளி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் நேற்று மாலை மற்றும் இரவு வீசிய பலத்த சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. 

Story image

மேலும் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த மரங்களில் இருந்து வெட்டப்படும் வாழைத்தார்கள் விற்பனை செய்ய முடியாமல் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தனக்கு இரண்டு லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளதாகவும் எனவே விவசாயகளின் வாழ்வாதரத்தை காக்க அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.