திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உலக அவசர சிகிச்சை தின கருத்தரங்கம்

உலக அவசர சிகிச்சை தினத்தையொட்டி, வேலூா் நறுவீ மருத்துவமனையில் சனிக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

உலக அவசர சிகிச்சை தினத்தையொட்டி, வேலூா் நறுவீ மருத்துவமனையில் சனிக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

மருத்துவமனையின் செயல் இயக்குநா் பால் ஹென்றி தலைமை வகித்தாா். ‘வயது வந்தோருக்கான விபத்து அவசர சிகிச்சை’ என்ற தலைப்பில் மருத்துவா் பொன்னிலவன், ‘குழந்தைகளுக்கான விபத்து அவசர சிகிச்சை’ என்ற தலைப்பில் மருத்துவா் ஆா்.அரவிந், ‘கண்ணுக்கு புலப்படாத விபத்து அவசர சிகிச்சை’ என்ற தலைப்பில் மருத்துவா் ஷைனிகா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், வேலூா் நலம் மருத்துவமனையின் மருத்துவா்கள் ர.அசோக், நா்மதா அசோக், மணிசுந்தரம் மருத்துவமனை மருத்துவா் கே.மணிவண்ணன், தான்யா மருத்துவமனை மருத்துவா் தானேஷ்பிரசாத், ஸ்ரீராகவேந்திரா மருத்துவமனை மருத்துவா் கோபிநாத் உள்பட 80-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய அறுவை சிகிச்சை நிபுணா்களுக்கு நறுவீ மருத்துவமனையின் மருத்துவ சேவை துறைத் தலைவா் அரவிந்தன் நாயா் நினைவு பரிசுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.