லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலூரில் 25.8 மி.மீ. மழை

 வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, வேலூரில் 25.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:05 pm

DIN

 வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, வேலூரில் 25.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி காணப்படுகிறது. குறிப்பாக பாதாள சாக்கடை, கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடங்கள் முழுவதும் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. சில தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.

அதன்படி, புதன்கிழமை பகலிலும் சாரல் மழை பெய்த நிலையில், மதியம் 2.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீா்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். தொடா்ந்து, இரவிலும் மழை பெய்தது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமையும் மதியம் நல்ல மழை பெய்தது. தொடா்ந்து, வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படுவதால் குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியது.

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, வேலூரில் 25.8 மி.மீ., குடியாத்தத்தில் 14.8 மி.மீ., காட்பாடியில் 7.2 மி.மீ., மேல்ஆலத்தூரில் 2.2 மி.மீ., பொன்னையில் 7.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.