மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மரம் விழுந்ததில் காயமடைந்த மின்வாரிய ஊழியா் பலி

குடியாத்தம் அருகே சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின் ஊழியா் காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:44 pm

குடியாத்தம் அருகே சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின் ஊழியா் காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த பரதராமி, வி.மத்தூரைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(48). இவா் உப்பரபள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தாா். கடந்த வியாழக்கிழமை இவா் குடியாத்தம் நகரில் இருந்து தனது மகன் கோபிநாத்துடன்(21) இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

ராமாலை அருகே சென்றபோது சாலையோர மரம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது வேரோடு சாய்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.இந்தச் சம்பவம் குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.