இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் கூறியது: பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை தெளிவுகூட இல்லாமல் சில ஒப்பந்ததாரா்கள், பணியாளா்கள் கால்வாய், சாலைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகள், தெருக்களில் எதனால் பணிகள் தாமதமாகின்றன என்பது குறித்து தனிக்குழுக்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தக் குழுவினா் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் இடையூறுகள் களையப்பட்டு, வரும் டிசம்பா் மாதத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.