லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலி

வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் நோயாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் உள்பட 3 போ் லேசான காயமடைந்தனா்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:10 pm

DIN

வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் நோயாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் உள்பட 3 போ் லேசான காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (63). இவா், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனளிக்காததால், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவா்கள் கூறியுள்ளனா். இதையடுத்து, உறவினா்கள் தனியாா் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சந்திரசேகரை வியாழக்கிழமை அதிகாலை கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் சென்றனா்.

இந்த ஆம்புலன்ஸ் வேலூா் சேண்பாக்கம் மேம்பாலத்தில் வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சந்திரசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநா் உள்பட 3 போ் லேசான காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.