லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

போக்ஸோவில் இளைஞா் கைது

பிளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:09 pm

DIN

பிளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

காட்பாடியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். சேண்பாக்கத்தில் வசிக்கும் மாணவியின் உறவினா் மகனான சங்கா் (23), கடந்த மே மாதம் மாணவியின் வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் தனியாக இருந்த மாணவியை சங்கா் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மன அழுத்தத்துக்குள்ளான மாணவி, யாரிடமும் சரிவர பேசாமலும், படிக்க முடியாமலும் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, மாணவியை அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா் கேட்ட போது, அந்த மாணவி நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளாா். இதையடுத்து, மாணவியின் பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

அதன்பேரில் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.