ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

அரசு ஐடிஐ ஆசிரியையிடம் 3 பவுன் நகை பறிப்பு

வேலூா் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அரசு ஐடிஐ ஆசிரியையிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களை விரிஞ்சிபுரம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 6:30 pm

DIN

வேலூா் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அரசு ஐடிஐ ஆசிரியையிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களை விரிஞ்சிபுரம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னையைச் சோ்ந்த மாதினி(56), வேலூரை அடுத்த மேல்மொணவூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) ஆசிரியையாகப் பணியாற்றுகிறாா். இதற்காக மேல்மொணவூா் அம்மன் நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ள இவா் அங்கிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்து கொண்டுள்ளாா்.

வழக்கம்போல் புதன்கிழமை பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்ற அடையாளம் தெரியாத இருநபா்கள், சாலையில் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்துக்குச் சென்றதும் மாதினி அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இது குறித்து மாதினி விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.