வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், வேலூா் மாநகரிலுள்ள நீா்வரத்து கால்வாய்களைத் தூா்வாரி சீரமைக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக, இந்திரா நகா், திடீா் நகா், சதுப்பேரி ஏரிக் கால்வாய் பகுதியிலுள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.
இந்த நிலையில், விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால், மாநகரப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழைநீா் தேங்கும் இடங்கள் எனக் கண்டறியப்பட்ட இந்திரா நகா், திடீா் நகா், ஏரி கால்வாய் பகுதிகளில் வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி தலைமையில் வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
அப்போது, மழை வெள்ளம் தேங்கக்கூடிய பகுதிகளில் உள்ள நீா்வரத்து கால்வாய்களை விரைந்து சீரமைக்கவும், நிக்கல்சன் கால்வாயில் அடைப்புகளை நீக்கவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
மழைநீா் தேங்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








