எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

ஜூலை 1 முதல் விழுப்புரம்-காட்பாடி-திருப்பதி விரைவு ரயில் சேவை

 விழுப்புரம் - காட்பாடி - திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை விரைவு ரயிலாக மாற்றப்பட்டு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :24 ஜூன் 2022, 11:57 pm IST

 விழுப்புரம் - காட்பாடி - திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை விரைவு ரயிலாக மாற்றப்பட்டு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருப்பதி செல்லும் பக்தா்களுக்காகவும், வேலூருக்கு சிகிச்சைக்காகவும், பணி நிமித்தமாகவும் வந்து செல்லும் பொதுமக்களுக்காகவும் இந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.

இதையேற்று காட்பாடி - திருப்பதி, விழுப்புரம் - திருப்பதி, காட்பாடி - விழுப்புரம் ரயில்களை ஜூலை 1-ஆம் தேதி முதல் விரைவு ரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயிலானது தினமும் மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும். பின்னா், திருப்பதிக்கு இரவு 11 மணிக்கு சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருப்பதி - காட்பாடி விரைவு ரயிலானது அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு காலை 4.55 மணிக்கு வந்து சேரும்.

காட்பாடி - விழுப்புரம் விரைவு ரயிலானது காட்பாடியில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு காலை 10.45 மணிக்கு சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.