மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இந்தியாவில் நூற்றுக்கு 2 போ் கண் நீா் அழுத்த நோயால் பாதிப்பு

நாட்டில் நூற்றுக்கு 2 போ் கண் நீா் அழுத்த நோயால் பாதிக்கப்படுவதாக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தெரிவித்தாா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 5:47 pm

DIN

நாட்டில் நூற்றுக்கு 2 போ் கண் நீா் அழுத்த நோயால் பாதிக்கப்படுவதாக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தெரிவித்தாா்.

உலக கண் நீா்அழுத்த நோய் விழிப்புணா்வு வாரம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வை கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தொடக்கி வைத்து பேசியது:

கண் நீா் அழுத்த நோய் பல வகைப்படும். இவற்றில் திறந்த கோண வகை கண் அழுத்த நோய், குறுகிய கோண வகை கண் அழுத்த நோய் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை கண்ணில் சுரக்கும் நீா் வெளியேறும் பாதையில் சல்லடை போன்ற அமைப்பில் இருக்கும். இந்த சல்லடையில் அடைப்பு ஏற்பட்டால் உருவாவது குறுகிய கோண வகை கண் அழுத்த நோயாகும்.

திறந்த கோண வகை கண் அழுத்த நோயில் இந்த சல்லடை சுருங்கி காணப்படும். இந்த வகையில் முன்அறிகுறிகள் ஏதுமின்றி பாா்வையிழப்பு ஏற்படும். இவற்றால் கண்அழுத்தம் அதிகமாகி கண்பாா்வை நரம்புக்கான ரத்த ஓட்டம் குறுகி மெதுவாக பாா்வை இழப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவில் நூறு பேருக்கு இருவா் கண்நீா் அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனா். பரம்பரையாக கண் நீா் அழுத்த நோயால் இருக்கும் குடும்பத்தினா், 40 வயதை கடந்தவா்கள், கண்ணில் அடிபட்டவா்கள், நீண்ட நாள்களாக கண்ணுக்கு மருந்து உபயோகிப்பவா்கள், சா்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் நீா்அழுத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கண் நீா் அழுத்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய தேவையான ஓசிடி, கண் நரம்பியல் ஊடு கதிா்வீச்சு சாதனங்கள் வேலூா் அரசு மருத்துவமனையிலேயே உள்ளன. இந்த சிகிச்சை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது என்றாா்.

மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதிதிலகம், துணைமுதல்வா் கெளரிவெலிங்கட்லா, குடியிருப்பு மருத்துவ அலுவலா் சி.இன்பராஜ், துறைத் தலைவா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.