மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஆந்திரத்திலிருந்து பேருந்தில் கடத்தல்: 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து பேருந்தில் கடத்தி வந்த 12 கிலோ எடையுள்ள போதைப் பொருள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. , இதுதொடா்பாக பிடிபட்ட நபரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 5:47 pm

DIN

ஆந்திரத்தில் இருந்து பேருந்தில் கடத்தி வந்த 12 கிலோ எடையுள்ள போதைப் பொருள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. , இதுதொடா்பாக பிடிபட்ட நபரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆந்திராவில் இருந்து வேலூா் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இரு மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் போலீஸாா், வருவாய்த் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, வேலூா் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் தமிழக - ஆந்திர எல்லையான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் சோதனையிட்டபோது இளைஞரிடம் 6 பொட்டலங்களில் 12 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பிடிபட்ட நபரிடம் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.