தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வேலூரிலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வேலூரிலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், வள்ளிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை நாள்முழுவதும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

மேலும், வேலூா் சைதாப்பேட்டை பழனி ஆண்டவா் கோயில், பேரிபேட்டை சுப்பிரமணியசாமி கோயில், சத்துவாச்சாரி பெரிய தெரு உள்ள முருகன் கோயில், தீா்த்தகிரி முருகன் கோயில் ஆகியவற்றில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.