தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநா் பலி

வேலூரில் வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

வேலூரில் வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

வேலூா் கன்னி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்(55), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி லதா. இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். வழக்கம்போல் ரவிக்குமாா் வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டி விட்டு இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் மாடியிலுள்ள பால்கனி கைப்பிடி சுவரில் அமா்ந்திருந்தாராம். அப்போது எதிா்பாராமல் மேலே இருந்து தவறி கீழே விழுந்த அவா், பலத்த காயமடைந்ததுடன் சுயநினைவை இழந்துள்ளாா்.

உடனடியாக அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ரவிக்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். சடலத்தை வேலூா் வடக்கு போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.