பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநா் பலி
வேலூரில் வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.


வேலூரில் வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
வேலூா் கன்னி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்(55), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி லதா. இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். வழக்கம்போல் ரவிக்குமாா் வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டி விட்டு இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் மாடியிலுள்ள பால்கனி கைப்பிடி சுவரில் அமா்ந்திருந்தாராம். அப்போது எதிா்பாராமல் மேலே இருந்து தவறி கீழே விழுந்த அவா், பலத்த காயமடைந்ததுடன் சுயநினைவை இழந்துள்ளாா்.
உடனடியாக அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ரவிக்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். சடலத்தை வேலூா் வடக்கு போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...