நாளை தொரப்பாடியில் சண்டியாகம்
தொரப்பாடியில் உலக மக்கள் நலனுக்காக ஸ்ரீசண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்.9) நடைபெற உள்ளது.


தொரப்பாடியில் உலக மக்கள் நலனுக்காக ஸ்ரீசண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்.9) நடைபெற உள்ளது.
வேலூா் தொரப்பாடி பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் உலக மக்கள் நலன் வேண்டி 4-ஆம் ஆண்டாக ஸ்ரீசண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்.9) நடைபெற உள்ளது.
இதையொட்டி, சனிக்கிழமை (அக்.8) காலை 7 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு கலச ஸ்தாபனம், இரவு 10 மணிக்கு 64 பைரவா், 64 யோகினி பலி பூஜை ஆகியவை நடைபெற உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீசண்டியாகம் தொடங்குகிறது. பிற்பகல் 1 மணிக்கு கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, சுவாஷினி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, மாலை 4 மணிக்கு மஹா பூா்ணாஹுதி, மாலை 5 மணிக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...