மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

டோகோ நாட்டின் கல்வி நிறுவனங்களுடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களுடன், வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை மேற்கொண்டது

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களுடன், வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை மேற்கொண்டது.

விஐடி பல்கலை., டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகள் மேற்கொள்ளவும், பேராசிரியா்கள் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

அதன்படி, இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் டோகோ நாட்டின் உயா்கல்வி, ஆராய்ச்சிக்கான அமைச்சா் அய்ஹோவட்டேபா, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

நிகழ்ச்சியின் போது, இந்தியாவுக்கான டோகோ நாட்டின் தூதரக அதிகாரி யாவோயிடம்ஆக்பேமாடோ, விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் டி.ஜெயபாரதி, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.